புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் அமைப்பு மூலம் கடவுச்சீட்டை பெறுவதற்கு நான்கு எளிய வழிமுறையினை அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஹோமாகம பிரதேச செயலக அலுவலக வளாகத்தில் நேற்று (15) இணைய முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் பின்வரும் முறையில் ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெறலாம்;

www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினை பார்வையிடவும்
உங்கள் கைத்தொலைப்பேசிக்கு கிடைக்கப்பெறும் கடவுக்குறியீட்டை உள்ளிடவும்
தொடர்புடைய அனைத்து அசல் ஆவணங்களின் SCAN செய்யப்பட்ட நகல்களை உள்ளிடவும்
அருகிலுள்ள நிலையத்திற்கு சென்று உங்கள் கைரகை அடையாளங்களை பதிவு செய்யவும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக 0112 101500 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version