தற்போது பெய்துவரும் கனமழைக்கு மத்தியில் எதிர்வரும் ஆறு மணித்தியாள காலப்பகுதிக்குள் பாலிந்த – நுவர, புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக நீர்ப்பாச திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதற்கமைவாக புளத்சிங்கள – மொல்காவ வீதி – வரகாகொட -கலவெல்ல வீதி – நாலியத்த- தபல வீதி முதலான் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதிகளை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களுகங்கையின் நீர்மட்டம் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும். களுகங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தற்சமயம் மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Share.
Exit mobile version