7,500 விஞ்ஞான பீட டிப்ளோமாதாரர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் பணி இன்று (16) நடைபெறவுள்ளது.

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகள் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்ட விஞ்ஞான பீட பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

Share.
Exit mobile version