2021ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட உரிமை மீறல்கள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு கலாநிதி அஜந்தா பெரேராவினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version