பல மாத ஊகங்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஒகஸ்ட்-செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கிண்ணத்துக்கான பாகிஸ்தானின் கலப்பின மாதிரி முன்மொழிவனை ஆசிய கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.

இதன் மூலம் 2023 ஆசியக் கிண்ண போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடப்படும்.

இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும்.

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் இலங்கையில் நடைபெறும்.

“2023 ஆசிய கிண்ணம் எதிர்வரும் ஒகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மொத்தம் 13 பரபரப்பான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும்” என்று ACC வியாழக்கிழமை (15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version