பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ சிப்பாய் மின்னேரியா இராணுவ முகாமின் மூன்றாவது பொறியியல் சேவை தலைமையகத்தில் பணியாற்றும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.

அவரது அச்சுறுத்தலுக்கு ஆளான மாணவியின் முறைப்பாடின் பேரில், பொலிசார் தகவல் வழங்கியதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாயை கைது செய்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் அனுராதபுரம், குருந்தன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version