இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒகஸ்ட் மூன்றாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அரச தரப்பு சாட்சியாளராக அவர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க இருந்தார். எனினும், கலகொட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரமான நீதிமன்றில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share.
Exit mobile version