நாட்டில், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், காவல்துறை தடுப்பில் உள்ள போது, சந்தேகத்துக்குரியவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் பதிவானதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய ஒருவரை கைது செய்து தடுத்து வைத்திருக்கும் போது, தேவையற்ற அச்சுறுத்தலை விடுக்க எவருக்கும் சட்டத்தில் இடம் இல்லை.

இந்தநிலையில், தற்போது அதிகரித்துள்ள குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share.
Exit mobile version