கேகாலை, ரம்புக்கனை பகுதியில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போலகம, கொட்டகம பகுதியில் ரம்புக்கனை பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதி தடையில், பொலிஸார் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துள்ளது.

இதையடுத்தே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்து, கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்கனை, ஹிரிவடுன பகுதியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version