நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டம் உட்பட கொழும்பு, களுத்துறை, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version