ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இன்று(13) முதல் உடற்பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையை 20% முதல் 25% வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வங்கி வட்டி குறைந்துள்ளமை காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை குறையலாம் என சங்கத்தின் தலைவர் திரு.நிருக்ஷ குமார தெரிவித்தார்.

Share.
Exit mobile version