மக்களுக்கு வரிச்சலுகையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் தங்களுக்கும் இலாபத்தை வைத்து கொண்டு மக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அது தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று (11) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையப் புறப்படும் முனையத்தில் விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

கேள்வி – இந்த நாட்டின் தற்போதைய முன்னேற்றம் எவ்வாறு உள்ளது?

பதில் – ஒரு வருடத்திற்கு முன்பிருந்த நிலைமையும் 12 மாதங்கள் கடந்த பின்னரும் மக்கள் தற்போதைய நிலைமை குறித்து நேர்மறையாக சிந்திக்க முடிந்துள்ளது. அந்த தியாகத்தை மக்கள்

செய்தார்கள். மக்களின் ஆதரவின்றி இதை ஒரு அரசால் மட்டும் செய்ய முடியாது. போராட்டகாரர்களால் ஏற்பட்ட அழிவுகள், நாட்டில் ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என ஒரு நாடாக நாம் எதிர்கொண்டதை நாம் அறிவோம்.

நாட்டை இன்று இருக்கும் நிலையில் மாற்ற மக்கள் பெரும் தியாகங்களை செய்துள்ளனர். இன்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கும் முகமாக வீதிக்கு வந்து போராடி நாட்டை அராஜகமாக்குவதற்கு குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் செயற்பட்டு வருகின்றன. இன்று மக்கள் அதனை புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் அதனை ஆதரிக்க மாட்டார்கள்.

கேள்வி – இந்த முன்னேற்றத்தின் முடிவுகளை அரசாங்கம் பெற்றுள்ளதா?

பதில் – டொலர் பெறுமதி எப்படி உயர்ந்தது என்று பார்த்தோம். எரிபொருள் மற்றும் எரிவாயு கொண்டு வர முடியாமல் இருந்த நாடு இது. டொலர் கையிருப்பு இல்லாத போது இன்று டொலர்

எப்படி குறைகிறது என்று பாருங்கள். இவ்வாறாக பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இன்று

நமக்கு அது பெரிய விஷயமாகிவிட்டது.

கேள்வி – அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை.

பதில் – மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் செலவுகள் அதிகரித்துள்ளன. மாவின் விலையையும் அன்றைய டொலரின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்று இருந்தால் இன்னும் குறைவாகக் கொடுக்க முடியும். அவர்களுக்கும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்நாட்களில் இவர்களை எப்படி அரசாக அங்கீகரிப்பது, சலுகை கொடுப்பது, வரியில் இருந்து கொஞ்சம் சலுகை கொடுப்பது எப்படி என்று ஆலோசித்து வருகின்றனர்.

Share.
Exit mobile version