இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர், பணவீக்கம் இவ்வளவு விரைவாக குறையும் என்று சர்வதேச அளவில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இலங்கை மத்திய வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவும் 2024 ஆம் ஆண்டில் வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என அறிவித்துள்ளதாகவும், அதற்காக தனது பங்களிப்பை வழங்க இலங்கை உறுதியாக வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version