நாளை (13) காலை 10.00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6.00 மணி வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பலன்வத்தை, கனத்த வீதி, நீரேற்று நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொரக்கபிட்டிய, சித்தாமுல்ல, அறுவ்வால, ரத்மல்தெனிய, மஹரகம – பிரியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவல வீதி, பொகுந்தர வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பக்க வீதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version