நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாக மாறும் அபாயம் நிலவுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.

அதேசமயத்தில், பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன், மாணவர்கள் பாடசாலைக்கு தொடர்ச்சியாக செல்ல முடியாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அவர்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி அல்லது தார்மீக வளர்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத பணிகளில் மட்டுமே ஈடுபட முடியும்.

இதேவேளை, சிறுவர்களை பாதுகாப்பற்ற வேலைகளில் அமர்த்துவதும், இரவு நேரங்களில் வேலைக்கு அமர்த்துவதும் சட்டவிரோதமானதாகும்.

இருப்பினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share.
Exit mobile version