சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களை வைத்திருந்த இராணுவ கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவலொன்றுக்கு அமைய கொஸ்கொட – கொடகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 24 கிராம் ஹெரோயின் மற்றும் 23 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version