அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரத்தில் வசிக்கும் 14 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்ட மூன்று மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறின் அடிப்படையில் இன்று அதிகாலை பேருந்தின் மீது குறித்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரமப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version