பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தபோது தொழில் பயிற்சி அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஐந்து கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவிற்கு குறித்த பொலிஸார் அழைக்கப்பட்டதை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version