பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளை துப்புரவுப் பணிகளை பெற்றோர்களின் தலையீட்டில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 41,883 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

Share.
Exit mobile version