கண்ணாடி போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயதான சிறுவன், விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம், மாலபே தலாஹேன ஹல்பராவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று முல்லேரியாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
அச்சிறுவன், கண்ணாடி போத்தலுடன் கீழே விழுந்துள்ளார். அப்போத்தல் உடைந்து உடம்பில் குத்தியமையால் அதிகளவில் இரத்தம் வெளியேறியுள்ளது.

இதனால் மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள், இல்லையேல் அச்சிறுவன் படுகொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version