யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், பொலிஸார், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால், மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக முன்னெடுத்த கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version