நாளையும் (25) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே நாளைக்குள் எரிவாயு வரிசைகளில் நிற்க வேண்டாம் என நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றைக்குள் (24) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என அந்நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு (LP) இரண்டு ஏற்றுமதிகளுக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக Litro தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 7,500 மெட்ரிக்தொன் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 3,500 மெட்ரிக்தொன் முதல் ஏற்றுமதி வியாழக்கிழமை (26) கொழும்பை வந்தடைய உள்ளதாகவும் அவர் கூறினார்.

Share.
Exit mobile version