ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ்வ சந்தியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (07) மாலை கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரகட ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காலி கொழும்பு வீதியில் மரக் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் அளுத்கமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி அந்த திசையில் பயணித்த சைக்கிள் ஒன்றின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த 32 வயதான சைக்கிள் ஓட்டுநர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

Share.
Exit mobile version