சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜூன் 10, 2023 முதல் அந்தப் பதவியிவிருந்து தான் இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் 18, 2019 இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்தார்.

இந்நிலையில் சப்ரகமுவ மாகாண ஆளுனராக பெரும்பாலும் நவீன் திசாநாயக்க அல்லது ரங்கே பண்டார நியமிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் இன்னும் சில மாகாணங்களின் ஆளுனர்களும் விரைவில் ராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Share.
Exit mobile version