மன்னம்பிட்டி காட்டுப் பகுதியில் நேற்று இரவு ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

குறித்த தண்டவாளத்தினூடாக வந்த ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டால் அவர் உயிர் தப்பியுள்ளார்.

மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது எழும்ப முடியாமல் தண்டவாளத்தில் வயோதிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த ரயில் சாரதி சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார்.

கடும் போதையில் இரத்தக் காயங்களுடன் இருந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ரயிலில் ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ரயில் சாரதியின் இந்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version