காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் திகதி குறித்து அறிவித்துள்ளது

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை ஜூலை 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இதன்போது வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்படாத நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் மீது விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடையையும் நீக்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Exit mobile version