ராஜங்கனை சத்தாரதன தேரர் எதிா்வரும் 21 ஆம் திகதி வரை தொடா்ந்து விளக்கமறியலில் ​​வைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமா்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னா் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version