காலி-கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இராணுவப் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் , அவரின் அடையாளம் இது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவ பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அக்குரஸ்ஸ – வெலிகம பிரதான வீதியின் உடுகாவ பகுதியில் நேற்று (05) பிற்பகல் இரண்டு பஸ்கள் மோதியதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version