ஊழல் தடுப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார்.

குறித்த சட்டமூலத்தில் உள்ள சில ஷரத்துகள் அரசியலமைபிற்கு முரணானவை என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தம் சட்டமூலத்தில் செய்யப்பட்டால் முரண்பாடுகள் இருக்காது என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version