முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை – பன்விலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைந்த ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளில் சென்று, வீதியில் செல்லும் பெண்களின் முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு செல்வதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைதானவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்கள், தொலைபேசிகள், சிம் அட்டைகள், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் , கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Share.
Exit mobile version