இந்த ஆண்டின், முதல் 5 மாதங்களில், 524,486 சுற்றுலாப் பயணிகள், நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதத்தில் மாத்திரம், 83 309 வெளிநாட்டவர்கள், சுற்றுலா வீசா மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு(2022) மே மாதம், 30,207 சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வீசா மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

எனவே, இந்த ஆண்டில், குறித்த காலப்பகுதியில், சுற்றுலாவில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, 175.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version