பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நேற்று (02) இரவு 10.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டை வந்தடைந்தனர்.

எனினும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் நாடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.

அதேவேளை போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் , பல்வேறு தரப்பினரும் கடும் கண்டங்களை தெரிவித்த நிலையில், விசாரணைகளை தொடங்க ஜனாதிபதி ரணிலும் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கிணங்க போதகரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Share.
Exit mobile version