அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் விசேட  கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர்கள் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அந்த அமைச்சுக்களின் விடயங்களை பகிர்ந்தளிக்கவில்லை எனவும், தனக்கு மட்டுமல்ல, அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான மாநில அமைச்சர்களுக்கும் இவ்வாறான விடயங்களையே எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைத் தெரிவித்த போது, ​​இந்த கலந்துரையாடலில் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

Share.
Exit mobile version