கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் 908 வீடுகள் குறித்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடியிருப்புக்களே இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழிலாளர் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் தன்னாட்சி முகாமைத்துவ அதிகார சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,கொழும்பு மாவட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இக்கட்டடங்கள் பாவனைக்கு தகுதியற்றவை என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share.
Exit mobile version