# ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் பரிசீலனைக்குப் பிறகு ரத்து செய்யப்படும். – காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நாளை சீராகிவிடுமென எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருள் கையிருப்பில் வைக்காத அல்லது எரிபொருளை உரிய வகையில் பெற்றுக்கொள்ளாத எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துளளார்.

எரிபொருள் நிலையங்கள் குறைந்தபட்சம் 50% இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் பரிசீலனைக்குப் பிறகு நிறுத்தப்படும்.

மே 22 ஆம் திகதி முதல் தினசரி எரிபொருள் கொள்முதல் செய்யப்படாத எரிபொருள் நிலையங்களின் பட்டியல் அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version