பிற்போடப்பட்டு வருகின்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகிறது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி பிற்பகல் இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அருகில் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த அனைவரும் ஒன்றுகூடி தேர்தல்கள் ஆணைக்குழுவை வற்புறுத்துகின்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version