கெக்கிராவையில் நியூசிட்டி எனும் பெயரில் பிரபலமான வர்த்தக நிறுவனம் ஒன்றை அக்குறணைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வருகின்றார்.

நேற்றிரவு அவரது வீட்டில் திருடன் ஒருவன் உட்புகுந்து திருட முயற்சித்த சந்தர்ப்பத்தில் அதனை நியூசிட்டி உரிமையாளரின் மனைவி கண்டுள்ளார். அதனையடுத்து தான் தப்பிக்கும் ​நோக்கில் திருடன் தேங்காய் மட்டை உரிக்கும் உளியைக் கொண்டு அப்பெண்ணைக் குத்திக் கொலை செய்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Exit mobile version