மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்த மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அருகில் இருந்த தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ராஜகிரிய விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நாரஹேன்பிட்ட பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

அவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version