கடந்த 2022 வருடம் ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் வரையில் மின் கட்டணம் செலுத்தாத மின் பாவணையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவித்தல்கள் 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் தரவுகளின் படி, கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை செலுத்தாத 253,465 பாவணையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மின்பாவணையாளரின் எண்ணிக்கை 408,189 ஆக உள்ளது.

அதன்படி, மின்கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் சிவப்பு அறிவித்தல் விடுப்பது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Share.
Exit mobile version