பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று (02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹம்ச தெரிவித்தார்.

அனுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இன்று முதல் 12 விசேட புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.

Share.
Exit mobile version