# போலித் தகவல்களை பரப்புபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சிறுவர்களை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிச் செல்லும் போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை கோரியுள்ளது.

அவ்வாறான போலித் தகவல்களை பரிமாற்றுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறார்கள் கடத்தப்படவுள்ளதாக அண்மைய சில நாட்களாக கிடைக்கப்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, போலியானவை என கண்டறியப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர்கள் கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பாக, அவசியம் என கூறி காவல்துறை எந்த ஒரு நபரைப் பற்றியும் தகவல் வெளியிடவில்லை.

இதன்காரணமாக அவ்வாறான போலி பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேநேரம், அவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கோரியுள்ளது.

Share.
Exit mobile version