கண்டி, குண்டசாலை நீர் விநியோகத்திட்டத்தில் அசுத்த நீர் கலப்பதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து அதனை நேரில் கண்டறிய மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே அதிகாரிகள் சகிதம் நேற்றுமுன்தினம் அங்கு விஜயம் மேற்கொண்டார்.

அதன்போது தும்பறை சிறைச்சாலையின் கழிவு நீர் கலக்கப்படுவதையும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் கழிவு நீர் தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரச மற்றும் தனியார் துறையினர் எப்போதும் உள்ளூராட்சி சபைகளின் சட்டதிட்டங்களுக்கு இணங்கி நடக்கவேண்டும் என்பதையும் ஆளுநர் வற்புறுத்தினார்.

Share.
Exit mobile version