ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உட்கொண்ட பின்னர், உணவு நஞ்சானதால் பாதிக்கப்பட்டு 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய 40 மாணவர்கள் அந்த ஹோட்டலின் உணவை உட்கொண்டதன் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது

இதனையடுத்து, குறித்த ஹோட்டலை ஹிக்கடுவைப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர். இதன்போது ஹோட்டலின் நீர்த்தாங்கி மாசடைந்து, நீண்ட நாட்களாக சுத்திகரிக்கப்படாத நிலையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் மாதிரிகளை களுத்துறை சுகாதார பரிசோதகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version