இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில்,  நேற்றைய தினம் (30.05.2023) ஒரே நாளில் மட்டும் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா – நீர்கொழும்பில் பாதசாரிகள் இருவரை லொறி மோதியதில் இருவர் மரணமடைந்துள்ளார்.
மூன்று வயது ஆண் குழந்தையும், அவரின் 29 வயதான தந்தையுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கண்டி – கம்பளையில் போருந்து மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
பேருந்தை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டவேளை அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குருநாகல் – குளியாப்பிட்டியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி மரணமடைந்துள்ளார். 42 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வான் மோதியதில் பாதசாரி ஒருவர் மரணமடைந்துள்ளார். 68 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – வெள்ளவத்தையில் தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியில் வான் விபத்துக்குள்ளானதில் 76 வயதான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர். களுத்துறை – பாணந்துறையில் ஓட்டோ கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார்.

33 வயதான முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த 41 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
மொனராகலை – வெல்லவாயவில் ஹயஸ் வான் மோதியதில் 72 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Share.
Exit mobile version