உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஸ் பெரேராவின் உடலம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரதேச செயலாளரை கடமை நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக உத்தியோகபூர்வ காரில் பிரதேச செயலாளர் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அவரது சாரதி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்போது, குறித்த சாரதி அவரது சடலம் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஏனைய உத்தியோகத்தர் மற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அறிவித்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணித்தவரின் உடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version