இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் கடன் அட்டை பயனாளர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து, 52 ஆயிரத்து 991 ஆக காணப்பட்டது.

எனினும், இந்த வருடத்தின் கடந்த மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 39 ஆயிரத்து 541 ஆக குறைவடைந்துள்ளது.

Share.
Exit mobile version