சர்வதேச நாணய நிதியத்தின் நிதிச் சபையின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கேன்ஜி ஓகமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் கேன்ஜி ஓகமுரா நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் தங்கியிருப்பார்.

அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் அண்மைய கால முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்த இருக்கும் சந்தர்ப்பங்கள் மற்றும் அதற்கான தடைகள்,தாமதங்களை குறைக்கு முறைகள் தொடர்பாக சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் எனவும் ஷெயான் சேமசிங்க மேலும் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version