நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்தனர்.

திருகோணமலை கோமரன்கடவல பிரதேசத்தில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 64 வயதுடைய பக்மீகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மதவாச்சி பூனேவ – ஹல்மில்லேவ பகுதியில், இன்று அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமது காணிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

Share.
Exit mobile version