இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு முன்னதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு சர்வதேச அளவில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version