கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக விடைத்தாள் திருத்தும் உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்று (29) முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன . விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜூன் 15 என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்படி உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்பங்களை onlineexams.gov.lk/eic இணையதளத்தின் ஊடாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க முடியமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version